Friday, May 18, 2012
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
கவிதை
எழுதும் போதெல்லாம்
உன் பிரிவை மறந்து
நீ என் அருகில் இருப்பதாக உணர்கிறேன்
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
உனக்கான
என் கவிதைகளோடு
Monday, May 7, 2012
இன்றும் இருவரும் உயிரோடு ............!!!
நம் காதலை
நாம் மறக்கவில்லை
அதனால் தான்
இன்றும் இருவரும் உயிரோடு ............!!!
மோட்சம்
நான் எழுதிய கவிதையில்
ஒன்றையாவது
நீ படித்திருந்தால்
என் கவிதைக்காவது
மோட்சம் கிடைத்திருக்கும்
உனக்கான என் காதல்
உனக்காக வாங்கபட்ட
ரோஜா
உனக்கு தரபடாமல் இருப்பது போல
உனக்கான
என் காதலும்
உன்னிடம் சொல்லப்படாமல்
என்னிடமே இருக்கிறது.
என் தூக்கத்தை இரையாக்கி விட்டன
உன்னை காதலிக்க
ஆரம்பத்தில் இருந்து
கனவுகளும் கற்பனைகளும்
என் தூக்கத்தை தமக்கு
இரையாக்கி விட்டன
Thursday, May 3, 2012
உறங்காத இரவுகள்
உன்னை நினைத்துக்கொண்டு
உறங்காத இரவுகள் எல்லாம் இன்றும்
என்னை கேலி
செய்கின்றன
என் தூக்கத்தை
தம் பறித்து விட்டோம்
என்று !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)