Friday, May 18, 2012

உன் வரவிற்காய் காத்திருப்பேன்



கவிதை 
எழுதும் போதெல்லாம் 
உன் பிரிவை மறந்து 
நீ என் அருகில் இருப்பதாக உணர்கிறேன் 
உன் வரவிற்காய் காத்திருப்பேன் 
உனக்கான  
என் கவிதைகளோடு 

Monday, May 7, 2012

இன்றும் இருவரும் உயிரோடு ............!!!



நம் காதலை 
நாம் மறக்கவில்லை
அதனால் தான்
இன்றும் இருவரும் உயிரோடு ............!!!

மோட்சம்



நான் எழுதிய கவிதையில்
ஒன்றையாவது 
நீ படித்திருந்தால்
என் கவிதைக்காவது
மோட்சம் கிடைத்திருக்கும் 

உனக்கான என் காதல்


உனக்காக வாங்கபட்ட
ரோஜா 
உனக்கு தரபடாமல் இருப்பது போல 
உனக்கான 
என் காதலும் 
உன்னிடம் சொல்லப்படாமல் 
என்னிடமே இருக்கிறது.

என் தூக்கத்தை இரையாக்கி விட்டன



உன்னை காதலிக்க 
ஆரம்பத்தில் இருந்து 
கனவுகளும் கற்பனைகளும் 
என் தூக்கத்தை தமக்கு 
இரையாக்கி விட்டன 

Thursday, May 3, 2012

உறங்காத இரவுகள்



உன்னை நினைத்துக்கொண்டு 
உறங்காத இரவுகள் எல்லாம் இன்றும் 
 என்னை கேலி செய்கின்றன 
என் தூக்கத்தை 
தம் பறித்து விட்டோம்
 என்று !!!