Thursday, December 29, 2011

வரம்


உன்னை எண்ணி 
நான் காணும் 
கற்பனைகள் யாவும் 
நினைவாகவும் 
நினைவுகள் யாவும் 
கனவாகவும் 
கனவுகள் யாவும் 
நிஜமாகவும் 
இதுவே நான் புரியும் 
காதல் தவத்திற்கு வரம் 

தாங்கிக்கொள்ள முடியாது

என்னவனே!
உன்னை எண்ணி
 கனவுகள் 
அதிகம் காண்பதில்லை 
கனவுகள் 
கலைந்து விட்டல் 
என்னால் தாங்கிக்கொள்ள முடியாது 

Wednesday, December 14, 2011

--நினைவு--



இருவரும் ஒருவரை ஒருவர்
பிரிந்த காலத்தில்
இருவரின் தனிமைக்கும்
துனையாக இருந்தது
நாம் சேர்ந்த கால
நினைவுகள் மட்டுமே

--கண்கள்--



இருவரும் சந்தித்து
நெடுநேரம் ஆகியும்
மொனத்தையே மெல்ல
நம் கண்கள்
நமக்கும் சேர்த்து
பேசிவிடுகின்றன.

Sunday, December 4, 2011

--மௌனம்--



காதலர்கள் மௌனம்
சாதிக்கும் போது
அவர்களது கண்கள்
ஆயிரக் கணக்கில் பேசிவிடுகிறன.

--காதல்--



ணுக்கு பெண்ணும்
பெண்ணுக்கு ஆணும்
தரும் சுகமான சுமை
காதல்.

Tuesday, November 29, 2011

பொக்கிஷம்



நானும்  நீயும் 
திருமணம் செய்த பின் 
உனக்காக நான் தரும் பரிசு 
நீ எனக்கு தந்த பரிசு 
பொருட்களை 
எங்ஙகனம் பொக்கிஷமாக 
வைத்திருக்கிறேன் என்பதுதான் ..............

Saturday, November 26, 2011

--தோல்வி--


காதலில்
தோற்றவர்களால் தான்
கவிதை எழுத முடியுமாம்
அது எப்படி
நான்தான் உன்னிடம்
என் காதலைச்
சொல்லவே இல்லையே

--பிரிதல்--


என்னை மறந்துவிடச்
சொல்லதே
பிரிந்து விடுகிறேன்
பிரிந்தாவது உன்னை
மறக்க சொல்ல மாட்டாய்
உன்னை மறந்துதான்
வாழமுடியாது
பிரிந்து வாழமுடியும்
உன் நினைவுகளோடு

Thursday, November 24, 2011

என்றென்றும் என்னுள்..



உன் நினைவால் நிரம்பிய 
          என் இதயமும் 
உன் காதலால் நீ தந்த 
           உணர்வும் 
என்னைத்தவிர யாராலும் 
           அறியவும் உணரவும் 
முடியாத பொக்கிஷமாக 
           என்றென்றும் என்னுள்........... 

--தூய்மை--


பனித்துளி
போல
என்காதலும்
தூய்மையானது.

உண்மைக்காதல்--


சூரியனைத் தூரத்திலே
கண்டவுடன் மலரும்
தாமரையும்
உன்னைக் கண்டவுடன்
மௌனத்தையே மொழியாக்கிக்
கொள்ளும் நானும் ஒன்று
ஏன் தெரியுமா?
இருவரது காதலும்
உண்மைக்காதல் என்பதால்தான்.

Tuesday, November 22, 2011

என் கனவில் கூட உன்னை பிரியும் சந்தர்பம்



கனவில் கூட 
உன்னை பிரிந்ததும் 
எதுவும் தெரியாத 
யாருமற்ற 
இருட்டு பாதையில் 
நான் மட்டும் ......
நீ என்னை 
நிஜத்தில் பிரிந்தால் கூட 
உன் பிரிவு என்னை 
நீண்ட என் வாழ்கை 
பாதையை இருட்டாகிவிடும் 
என்னவனே !!!!!
புரிந்துகொள் ...............

Monday, November 21, 2011

என் நாட்குறிப்பில்


இன்றும் கூட
நீ
எனக்கு தந்த
பூ
மகிழ்வடைகிறது
வெளியே இருந்து
தான்
உருவற்று
போவதை விட
எத்தனையோ
ஆண்டுகள்
உயிரற்ற உருவோடு
என் நாட்குறிப்பில்
வாழ்வதால்

Sunday, November 20, 2011

நான் சுவாசிப்பதற்கு .......



என்னவனே! 
நீ 
சுவாசித்த காற்றை
விரைவாக என்னிடம் அனுப்பி விடு 
என்னை தீண்டுவதற்கு அல்ல 
நான் சுவாசிப்பதற்கு ..................

வழி கிடைக்கவில்லை



உன்னையும் 
உன் நினைவுகளையும் 
மறந்து வாழ வழி தேடினேன் 
கனவில் கூட அது எனக்கு கிடைக்கவில்லை 

உன் நினைவுகள்



என் இதய கூண்டில் 
யாராலும் 
திருட முடியாத ஒன்று 
உன் நினைவுகள் 

கனவு



என்னவனை  
நான் காண இறைவன் 
தந்த வரம் கனவு 

என்று வந்து வாழ்வளிக்க போகிறாய் ..???




என்னவனே 
உன் பேச்சொலி கேட்டு 
ஜதிகள் செய்துவந்த 
என் காற்கொலுசுகள்
இன்று கணவனை இழந்த 
விதவை போல் துடிக்கிறது 
என்று வந்து வாழ்வளிக்க போகிறாய் ...............???

Friday, November 18, 2011

நீ நல்லவனாக தெரிவதால்


உன்னை பற்றி யார் என்ன
சொன்னாலும் என்னால்
நம்ப முடியவில்லை காரணம்
எனக்கு மட்டும்
நீ நல்லவனாக தெரிவதால்

Sunday, November 13, 2011

என்று நீ மௌனம் கலைக்கின்றாயோ அன்றே நாம் இருவரும் காதலர்கள்



நீ தலையில் சூடும் பூவிற்கு தரும்
பிறவி பலனை ஏன் எனக்கு தரமறுக்கிறாய் 
நீ என்னை காதலிப்பதை 
உன் கண்கள் சொல்லி விடுகின்றன 
ஏன் உதடுகள் சொல்லவருவதை
 தடுத்து மௌனிகின்றாய் 

உன் இதய வீட்டில் 
நான் மட்டுமே குடியேற முடியும் அதனை 
உன்னை காணும் போது 
உன் கண்கள் எனக்கான இடத்தினை  உறுதி செய்கின்றன 
என்று நீ மௌனம் கலைக்கின்றாயோ 
அன்றே நாம் இருவரும் காதலர்களாக முடியும் 

Friday, November 11, 2011

காதலுடன்


அன்றே மலர்ந்து
அன்றே வாடும் பூவல்ல
என் காதல்

உன்னை நினைத்து
என் இதயக்கூண்டில்
ஏற்றிய உன்னை எவ்வித
காரணங்களாலும் என்னால்
வெறுக்க முடியாது

உன்னை விட்டு நான் பிரிந்தாலும் உன்
நினைவுகள் என்னுள் அழிக்க முடியாத
ஒன்றாக இன்று மட்டுமல்ல
என்றுமே என்னோடு இருக்கும் காதலுடன் .

உனக்காகவே காத்திருக்கிறேன்



இன்று நீயும் நானும் சேர்ந்தில்லை
நம் நினைவுகள் கூட எம்மால் பிரிக்க முடியாத 
அளவிற்கு ஒன்று சேர்ந்துள்ளன 

உன்னை காணும் நாட்கள் எல்லாம் 
மொழிகள் மட்டுமல்ல விழிகளும்
 மௌனித்து விட்டன

 என் காதலை
 உனக்கு சொல்லிருந்தால் 
இருவரும் ஒருவரை ஒருவர் 
பிரிந்திருக்க தேவையில்லை 

உன்னை பிரியும் போது என் 
கண்கள் கூட மௌனித்து விட்டது 
கரணம் என் உயிரான நீ 
என்னை பிரியும் போது 
உயிர் அற்ற உணர்வற்ற ஜடமாகிவிட்டேன் 

உன்னை பிரிந்த அந்த நொடி இருந்து 
என்னை மறந்து 
உன்னை மட்டுமே  நினைத்து 
உனக்காகவே காத்திருக்கிறேன் 

Thursday, November 10, 2011

ஆசை


நேற்று நானாக
இன்று நீயாக
நாளை நாமாக வாழ ஆசை

நான் நிஜ வாழ்கை வாழ ..........



உன்னோடு நிஜத்தில் வாழ 
ஆசை இல்லை
உன்னோடு கனவில் வாழ்ந்த 
அந்த நொடிகளே போதும் 
நான் நிஜ வாழ்கை வாழ ..........

Tuesday, November 8, 2011

மழைகாலநினைவுகள்



அன்றொரு நாள் மழைகாலம்
நானும் நீயும் மட்டும்
தனிமையில்

இருவரும் சண்ணடை பிடித்துக்கொண்டு
நீ ஒரு பக்கமும் நான் மறு பக்கமும்
திரும்பி பார்த்தபடி

எத்தனையோ காதலர்கள்
என்னென்னவோ தமக்குள்
பேசிக்கொண்டிருக்க
நானும் நீயும் மட்டும்
கோபத்தோடு பேசிக்கொள்ள

என்னோடு நீ பேசுவாய் என நானும்
உன்னோடு நான் பேசுவேன் என நீயும்
காத்திருந்தே அன்றைய பொழுது கழிந்தது

 இருவரும் ஒருவருக்குள் ஒருவர்
நான் செய்தது தவறா நான் செய்தது தவறா ?என
எண்ணியபடி நாம்

எத்தனையோ
காதலர்கள்
என்னென்னவோ தமக்குள் பேசிக்கொள்ள
தமக்குள் பேசிக்கொண்டிருக்க
 நானும் நீயும் மட்டும்
கோபத்தோடு மௌனம் பேச

உன்னோடு பேச என கைபேசி எடுத்து
நீ அழைப்பாய் என வைத்துவிடுவேன்
நீ அழைத்ததும் புதிதாக பிறந்த உணர்வோடு பேச
மழைத்துளிகள் என்னோடு போட்டி போட்டு
தன் காதலை அது சொல்லியது

நம் இருவர் சண்டையும் முடிவுக்கு வர
நம் சண்டையின் காரணத்தை அன்றோடு மறக்க
இன்று கேட்டலும் நாம்
ஒருதடவை மட்டும் பிரிந்தோம் என்பது
உண்மை ஆனால்
இருவர் மனதிலும் இன்றுவரை
நாம் பிரிந்த அந்த நொடியை
இன்றுவரை எண்ணி பார்ப்பதில்லை.............................

Sunday, November 6, 2011

நினைவுகள்


 
இருவரும் ஒருவரை ஒருவர் 
பிரிந்திருந்த காலத்தில்
 நம் இருவர் தனிமைக்கும் துணை நாம் 
சேர்ந்திருந்த கால நினைவுகள் மட்டும் தான் 

மௌனம்




மௌனம்
காதலர்கள் சந்திக்கும் போது 
அதிகம் பேசிக்கொள்ளும் மொழி

நாம் இருவர் தான் அதற்கு துணை



நானும் நீயும் நடை பயின்ற 
நிசப்தம் அற்ற அந்த ஒற்றை அடி பாதை 
இன்று தனியாக தவிக்கிறது காரணம் 
நாம் இருவர் தான் அதற்கு துணை

நம் கண்கள் நமக்கும் சேர்த்து பேசிவிடுகின்றன


இருவரும் சந்தித்து நெடுநேரமாகியும்
மௌனத்தையே மெல்ல நம் கண்கள் மட்டும்
நமக்கும் சேர்த்து பேசிவிடுகின்றன

Tuesday, November 1, 2011

நீ வேறு எந்த பெண்னிடம் பேசினாலும் நான் கோவித்துக் கொள்கிறேன்...


நீ வேறு எந்த பெண்னிடம் 
பேசினாலும் நான் கோவித்துக் கொள்கிறேன் 
இதைக்கண்டு உனக்கு பொறமை என்று நீ கூறுவை 
ஆனால் அது பொறமை இல்லை 
நான் உன்மேல் கொண்ட காதல் என்று ..............

தனிமை...............



இரவில் உன்னோடு பேசுவதை 
எல்லாம் என்னை போல் தலைவனை பிரிந்து 
தனிமையில் தவிக்கும் நிலவோடு பேசிக்க கொள்கிறேன் 

என் பேனா........

என் பேனாவால் மட்டுமே
நான் உன் மேல் கொண்ட காதலை
உணர முடியும் எப்படி என்று கேட்கிறாய?
நான் உன்னை நினைக்கும் போது அது தான் என் உள்ளத்து
உணர்வை கவிதையாக வடிக்கிறது

Sunday, October 30, 2011

என் நினைவில் இருப்பது நீயும் உன் நினைவுகளும் மட்டும் தான் ..



என்னை பற்றி  யாராவது 
கேட்டல் உன்னை பற்றியே சொல்லிக் கொள்கிறேன் 
காரணம் என் நினைவில் இருப்பது 
நீயும் உன் நினைவுகளும் மட்டும் தான் .......

நம் காதலிலாவது இருக்கடும் .........


உனக்கு வேலைகள் இருந்தால் நீ பார்த்துக்கொள் 
உனக்கும் சேர்த்து நானே காதலித்து கொள்கிறேன் 
காதலனுக்கும் சேர்த்து காதலி காதலித்தது 
நம் காதலிலாவது இருக்கடும் .........

நம்பிக்கையில் தான் ................



நானும் நீயும் 
என்றோ ஒரு நாள் 
சேர்வோம் என்ற நம்பிக்கையில் தான் 
இன்றும் உயிர் வாழ்கிறேன் ...................

நீ பிரிந்த போது உணர்ந்தேன் .....................



நீ என்னை காதலித்த போது 
நினைக்கவில்லை பிரிவு எப்படி இருக்கும் என்று 
நீ என்னை பிரிந்த போது உணர்ந்தேன்
பிரிவின் கொடுமையை ..........

என் தாய் மொழி எனக்கு நன்றி கூறுகிறது



நான் உனக்காக 
கவிதை எழுதும் போது 
என் தாய் மொழி எனக்கு நன்றி கூறுகிறது
 தான் பிறவி பலனை அடைந்து விட்டதாக எண்ணி 

உன்னை வந்து சேர்வது என் கடன்



என்னவனே !
பிரிந்து போன நம் காதல் 
இன்றும் இருவர் கண்களிலும் 
கண்ணீர்துளியாய் 

ஏனோ இன்று நம் 
காதலின் சுகங்கள் 
வலிகளாககி அவை இன்று 
வாரங்களாகி விட்டன 

நிஜங்கள் எதுவும் 
இன்று என்னோடு இல்லாத போது
உன் நினைவுகள் மட்டும் 
உயிர்  உள்ள நியமாய் 

உன்னை கண்டுகொண்ட போது 
ஒரு நிமிடமேனும் சிந்திக்கவில்லை 
என் இதய வாசலில் உன்னை 
குடிபுகுவேன் என்று 

மொட்டாகி மலராது போன
மலர்கள் வலிகளை சுமந்து 
மறுபடி மலர்வதை போல
பிரிவையும் தாண்டி 
உன்னையே நினைக்கிறது 
மனது 

வெளியே வர முடியாமல் 
சிலந்தி வலையில் சிக்கிய 
சிறு புழுவாய் உன் பிரிவில் 
சிக்கிய இவளின் மரண வலி 
அறியாதவன நீ ???????

இனியவனே 
எனக்குள்ளிருக்கும் அத்தனையும் 
உனக்குள்ளுமிருந்தால் 
விரைவாக துது அனுப்பு 
உன்னை வந்து சேர்வது 
என் கடன் 



Saturday, October 29, 2011

என் நிழல் உனதாக தெரிகிறது

உனக்கா காத்திருக்கும் போதெல்லாம்
என் நிழல் உனதாகவே தெரிகிறது
இதுதான் காதலா?

உன் நினைவு

என் இதய புத்தகத்தில் உன் நினைவுகளை
தவிர வேறு எதுவும்  இல்லை

கண்கள்


உன் மீதுள்ள
காதலை
எப்படியாவது உன்னிடம்
சொல்ல வேண்டும் என்று வருவேன்
உன் கண்களை பார்த்த பிறகு
என்னையும் என் காதலையும்
மறந்து எதுவும் சொல்லாமலே
போய்விடுவேன்

கண்கள் இல்லை

காதலுக்கு
கண்கள் இல்லை என்று யார் சொன்னது
உன்கண்கள் தான் -என்
இதயத்தை திருடிச்சென்று
உன்னோடு வைத்திருக்கிறது

நீ கொண்ட காதல்


நீ 
என் மேல் கொண்ட காதலை 
நான் உணர்ந்ததில்லை 
என்னை நீ பிரியும் போதுதான் உணர்ந்தேன் 
நீ என் மேல் கொண்ட காதல் 
நான் உன் மேல் கொண்ட காதலை விட 
புனிதமானது என்று................................

Friday, October 28, 2011

இரவே இரக்கம் காட்டு என் மேல்......

  உன் நினைவுகள்
இன்றிய காலத்தில் மட்டும் 
இரவுகள் என் மேல் இரக்கம் காட்டின 
இன்று உன்நினைவுகள் இல்லாது என்னால் 
தூங்க முடியவில்லை 
காரணம் என் இரவெல்லாம் 
நீயாக இருப்பதால் 
உன் நினைவுகளை விட்டு
என்னால் தூங்க முடியவில்லை  
முடிந்தால் உன் நினைவுகள் மீண்டும்
உன்னிடமே அழைத்துக்கொள் 
உன் காதலை போல்

Thursday, October 27, 2011

புரிந்துகொள்வாய்




 
நீ என்னையும் என் காதலையும்
 என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வாய்
 என்ற நம்பிக்கையில் தான்
 இன்றும் உயிர் வாழ்கிறேன்...................

Wednesday, October 26, 2011

சந்தோஷம்






உனக்கா நான் பூங்கொத்தை வாங்கும் போது
வாடி இருந்த பூங்கொத்துகள்  எல்லாம்
மலர்ச்சி அடைகின்றன
காரணம் காவலன் கை விட்டு
காதலன் கை மாறப் போகிறோம் என்ற 
சந்தோஷத்தில் 

glitter-graphics.com

Wednesday, October 19, 2011

முடிவுரையை எழுதிவிட்டு போ..........


glitter-graphics.com



என் இதய புத்தகத்தில்
உன்னை பற்றி எழுதிய பக்கங்களே அதிகம்
என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
உனக்கான என் இதய புத்தகத்தின் முடிவுரையை
எழுதிவிட்டு போ...................

வெறும் கையோடு போகாதே .............!





என்னை காதலிக்கவில்லை என்பதற்க்காக
போகும் போது வெறும் கையோடு போகாதே
உன்னையே நினைத்து துடித்துக்கொண்டு இருக்கும் என் இதயத்தை உன்னோடு எடுத்து செல்

என் விழிகளை கேட்டுப்பார்





என்னவனே
என் விழிகளை கேட்டுப்பார்
உன் வரவிற்காய் எத்தனை முறை
நீ வரும் பாதையை திரும்பி பார்த்திருக்கும்
என்று ........................