Sunday, October 30, 2011

என் நினைவில் இருப்பது நீயும் உன் நினைவுகளும் மட்டும் தான் ..



என்னை பற்றி  யாராவது 
கேட்டல் உன்னை பற்றியே சொல்லிக் கொள்கிறேன் 
காரணம் என் நினைவில் இருப்பது 
நீயும் உன் நினைவுகளும் மட்டும் தான் .......

நம் காதலிலாவது இருக்கடும் .........


உனக்கு வேலைகள் இருந்தால் நீ பார்த்துக்கொள் 
உனக்கும் சேர்த்து நானே காதலித்து கொள்கிறேன் 
காதலனுக்கும் சேர்த்து காதலி காதலித்தது 
நம் காதலிலாவது இருக்கடும் .........

நம்பிக்கையில் தான் ................



நானும் நீயும் 
என்றோ ஒரு நாள் 
சேர்வோம் என்ற நம்பிக்கையில் தான் 
இன்றும் உயிர் வாழ்கிறேன் ...................

நீ பிரிந்த போது உணர்ந்தேன் .....................



நீ என்னை காதலித்த போது 
நினைக்கவில்லை பிரிவு எப்படி இருக்கும் என்று 
நீ என்னை பிரிந்த போது உணர்ந்தேன்
பிரிவின் கொடுமையை ..........

என் தாய் மொழி எனக்கு நன்றி கூறுகிறது



நான் உனக்காக 
கவிதை எழுதும் போது 
என் தாய் மொழி எனக்கு நன்றி கூறுகிறது
 தான் பிறவி பலனை அடைந்து விட்டதாக எண்ணி 

உன்னை வந்து சேர்வது என் கடன்



என்னவனே !
பிரிந்து போன நம் காதல் 
இன்றும் இருவர் கண்களிலும் 
கண்ணீர்துளியாய் 

ஏனோ இன்று நம் 
காதலின் சுகங்கள் 
வலிகளாககி அவை இன்று 
வாரங்களாகி விட்டன 

நிஜங்கள் எதுவும் 
இன்று என்னோடு இல்லாத போது
உன் நினைவுகள் மட்டும் 
உயிர்  உள்ள நியமாய் 

உன்னை கண்டுகொண்ட போது 
ஒரு நிமிடமேனும் சிந்திக்கவில்லை 
என் இதய வாசலில் உன்னை 
குடிபுகுவேன் என்று 

மொட்டாகி மலராது போன
மலர்கள் வலிகளை சுமந்து 
மறுபடி மலர்வதை போல
பிரிவையும் தாண்டி 
உன்னையே நினைக்கிறது 
மனது 

வெளியே வர முடியாமல் 
சிலந்தி வலையில் சிக்கிய 
சிறு புழுவாய் உன் பிரிவில் 
சிக்கிய இவளின் மரண வலி 
அறியாதவன நீ ???????

இனியவனே 
எனக்குள்ளிருக்கும் அத்தனையும் 
உனக்குள்ளுமிருந்தால் 
விரைவாக துது அனுப்பு 
உன்னை வந்து சேர்வது 
என் கடன் 



Saturday, October 29, 2011

என் நிழல் உனதாக தெரிகிறது

உனக்கா காத்திருக்கும் போதெல்லாம்
என் நிழல் உனதாகவே தெரிகிறது
இதுதான் காதலா?

உன் நினைவு

என் இதய புத்தகத்தில் உன் நினைவுகளை
தவிர வேறு எதுவும்  இல்லை

கண்கள்


உன் மீதுள்ள
காதலை
எப்படியாவது உன்னிடம்
சொல்ல வேண்டும் என்று வருவேன்
உன் கண்களை பார்த்த பிறகு
என்னையும் என் காதலையும்
மறந்து எதுவும் சொல்லாமலே
போய்விடுவேன்

கண்கள் இல்லை

காதலுக்கு
கண்கள் இல்லை என்று யார் சொன்னது
உன்கண்கள் தான் -என்
இதயத்தை திருடிச்சென்று
உன்னோடு வைத்திருக்கிறது

நீ கொண்ட காதல்


நீ 
என் மேல் கொண்ட காதலை 
நான் உணர்ந்ததில்லை 
என்னை நீ பிரியும் போதுதான் உணர்ந்தேன் 
நீ என் மேல் கொண்ட காதல் 
நான் உன் மேல் கொண்ட காதலை விட 
புனிதமானது என்று................................

Friday, October 28, 2011

இரவே இரக்கம் காட்டு என் மேல்......

  உன் நினைவுகள்
இன்றிய காலத்தில் மட்டும் 
இரவுகள் என் மேல் இரக்கம் காட்டின 
இன்று உன்நினைவுகள் இல்லாது என்னால் 
தூங்க முடியவில்லை 
காரணம் என் இரவெல்லாம் 
நீயாக இருப்பதால் 
உன் நினைவுகளை விட்டு
என்னால் தூங்க முடியவில்லை  
முடிந்தால் உன் நினைவுகள் மீண்டும்
உன்னிடமே அழைத்துக்கொள் 
உன் காதலை போல்

Thursday, October 27, 2011

புரிந்துகொள்வாய்




 
நீ என்னையும் என் காதலையும்
 என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வாய்
 என்ற நம்பிக்கையில் தான்
 இன்றும் உயிர் வாழ்கிறேன்...................

Wednesday, October 26, 2011

சந்தோஷம்






உனக்கா நான் பூங்கொத்தை வாங்கும் போது
வாடி இருந்த பூங்கொத்துகள்  எல்லாம்
மலர்ச்சி அடைகின்றன
காரணம் காவலன் கை விட்டு
காதலன் கை மாறப் போகிறோம் என்ற 
சந்தோஷத்தில் 

glitter-graphics.com

Wednesday, October 19, 2011

முடிவுரையை எழுதிவிட்டு போ..........


glitter-graphics.com



என் இதய புத்தகத்தில்
உன்னை பற்றி எழுதிய பக்கங்களே அதிகம்
என்னை காதலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை
உனக்கான என் இதய புத்தகத்தின் முடிவுரையை
எழுதிவிட்டு போ...................

வெறும் கையோடு போகாதே .............!





என்னை காதலிக்கவில்லை என்பதற்க்காக
போகும் போது வெறும் கையோடு போகாதே
உன்னையே நினைத்து துடித்துக்கொண்டு இருக்கும் என் இதயத்தை உன்னோடு எடுத்து செல்

என் விழிகளை கேட்டுப்பார்





என்னவனே
என் விழிகளை கேட்டுப்பார்
உன் வரவிற்காய் எத்தனை முறை
நீ வரும் பாதையை திரும்பி பார்த்திருக்கும்
என்று ........................

மௌனம்



என்னவளே
மௌனமாக இருப்பது பெண்ணுக்கு அழகுதான்
அதற்காக என் காதலை சொன்ன போது
ஏற்றுகொண்டாயா இல்லையா?
என்று சொல்லாமல் இருப்பது மோசடி
என்னவளே புரிந்துகொள் .............

தனிமை



தினமும் தனிமையை தேடிச் செல்கிறேன்
எவ்வளவு தூரம் சென்றாலும்
என் நிழல் போல் உன் நினைவுகள் என்னை
பின் தொடருகின்றன ...............

Saturday, October 15, 2011

தனிமை



யார் தனிமையில் இருந்ததாலும்
நான் கண் கலங்குகிறேன்
என்னைப் போல அவர்களும்
பிடித்தவர்களை பிரிந்து இருப்பார்களோ
என்று எண்ணி ..............

உன் மீது நான் கொண்ட காதல்







உன் மீது நான் கொண்ட காதலால்
கண்ணீர் சிந்துகிறேன்
நீ
என்னை பிரிந்ததைக்கூட உணரவில்லை
காரணம் உன்னை நினைக்கும் போது
என் கண்ணில் கண்ணீராக நீ வந்துவிடுவதால்

புரிந்து கொள்



நினைத்தவுடன் அழிபதற்கு
காதலும் நினைவுகளும்
தண்ணீரில் எழுதிய
எழுத்துக்கள் அல்ல

Friday, October 14, 2011

நினைவிருக்கிறதா





நானும் நீயும் முதல் முதல்
சந்தித்த மூங்கில் காடு
நினைவிருக்கிறதா ?

நீ எனக்கு தந்த
ஒற்றை ரோஜா
நினைவிருக்கிறதா ?

நீயும் நானும் சேர்ந்து
அனுபவித்த மழைகாலம்
நினைவிருக்கிறதா ?

உன்னக்காக நான் எழுதிய
முதல் கவிதை
நினைவிருக்கிறதா ?

உனக்கா நானும் எனக்கா நீயும்
நம் நண்பர்களுடன் அடிக்கடி சண்டை செய்வோமே
நினைவிருக்கிறதா ?

உனது பெயரும் எனது பெயரும்
சேர்த்து எழுதிய அந்த கடற்கரை
நினைவிருக்கிறதா ?

நானும் நீயும்
சந்தித்து கொள்ளும் போது
மயில் இறகு சேகரிப்போமே
நினைவிருக்கிறதா ?

உன் கனவில் நான் வர வேண்டும்
என் கனவில் நீ வர வேண்டும் என்று வேண்டிக்கொள்வோமே
நினைவிருக்கிறதா ?

உனக்கு நான் தந்த
முதல் முத்தம்
நினைவிருக்கிறதா ?

எனக்கு நீ எழுதிய முதல்
காதல் கடிதம்
நினைவிருக்கிறதா ?

எத்தனை பேர் சுற்றி இருந்ததாலும்
யாருக்கும் தெரியாமல் கண் சிமிட்டுவாய்
அந்த கள்ளத்தனம் நினைவிருக்கிறதா ?

நானும் நீயும்
பேசிக்கொண்டு நீண்டதூரம் செல்வோமே
அந்த ஒற்றையடிபாதை நினைவிருக்கிறதா?

Wednesday, October 12, 2011

உன் மீது நான் கொண்ட காதல்








தண்ணீரில் மிதக்கும் இலை கொண்ட
காதலை தண்ணீர் அறிவதில்லை

செடியின் மீது பூக்கும் பூ கொண்ட
காதலை செடி அறிவதில்லை
நிலவின் மீது நட்சத்திரம் கொண்ட

காதலை நிலா அறிவதில்லை

வான் மீது பறவை கொண்ட
காதலை வான் அறிவதில்லை

பூமி மீது மழை கொண்ட
காதலை பூமி அறிவதில்லை

கால்கள் மீது பாதை கொண்ட
காதலை கால்கள் அறிவதில்லை

உன் மீது நான் கொண்ட
காதலை நீயும் அறியவில்லை

உன் கண்ணில் கண்டேன்


நீ என்னை விட்டு பிரியும் போது
உன் உதடுகள் சந்தோசமாக
உன்னை பிரிகிறேன் என்றாலும்
உன் கண்ணில் இதயம் படும் வேதனையை கண்டேன்.

கவிதை



உனக்காக நான் கவிதை எழுதும் போது
தென்றல் அதிகம் வீசும் இடத்தில் இருந்தே எழுதுகிறேன்
காரணம் தென்றல் தான் எனக்கான
உன் செய்திகளை கொண்டு வந்து தருகிறது




Monday, October 10, 2011

காத்திருந்தே நம் காதல் காணாமல் போனது



நீ சொல்லுவாய் என நானும்
நான் சொல்லுவேன் என நீயும்
காத்திருந்தே நம் காதல் காணாமல் போனது.

தோற்று போகிறேன்


நீ என்னோடு பேசாத நாட்களில்
உன்னை மறந்தது விட வேண்டும் என நினைத்து
மறக்க முடியாமல் மீண்டும் மீண்டும்
தோற்று போகிறேன்

எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை .



நீ என்னை பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
எப்படி கடத்துகிறேன் என்பது
எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை .

இன்று நாம் காதலர்கள்

உனக்காக எழுதிய கவிதைகளை
உன்னிடம் கொடுத்திருந்தால்
இன்று நாம் இருவரும் காதலர்கள்

காதல்



காதல்
காதல் சொல்லி புரிவதில்லை
புரிந்துகொண்டு சொல்வதுதான் காதல்

Sunday, October 9, 2011

உனக்காக ஒன்று சேர்த்து



உனக்காக ஒன்று சேர்த்து
எழுதிய எழுத்துக்கள் எல்லாம்
நீ வந்து படித்தால் மட்டுமே தான் கவிதை ஆகும் .
விரைவாகவா காத்திருப்பது நான் மட்டுமல்ல
என்னோடு சேர்ந்து உனக்கான என் கவிதைகளும் தான்