Sunday, October 30, 2011
என் நினைவில் இருப்பது நீயும் உன் நினைவுகளும் மட்டும் தான் ..
நீ பிரிந்த போது உணர்ந்தேன் .....................
உன்னை வந்து சேர்வது என் கடன்
என்னவனே !
பிரிந்து போன நம் காதல்
இன்றும் இருவர் கண்களிலும்
கண்ணீர்துளியாய்
ஏனோ இன்று நம்
காதலின் சுகங்கள்
வலிகளாககி அவை இன்று
வாரங்களாகி விட்டன
நிஜங்கள் எதுவும்
இன்று என்னோடு இல்லாத போது
உன் நினைவுகள் மட்டும்
உயிர் உள்ள நியமாய்
உன்னை கண்டுகொண்ட போது
ஒரு நிமிடமேனும் சிந்திக்கவில்லை
என் இதய வாசலில் உன்னை
குடிபுகுவேன் என்று
மொட்டாகி மலராது போன
மலர்கள் வலிகளை சுமந்து
மறுபடி மலர்வதை போல
பிரிவையும் தாண்டி
உன்னையே நினைக்கிறது
மனது
வெளியே வர முடியாமல்
சிலந்தி வலையில் சிக்கிய
சிறு புழுவாய் உன் பிரிவில்
சிக்கிய இவளின் மரண வலி
அறியாதவன நீ ???????
இனியவனே
எனக்குள்ளிருக்கும் அத்தனையும்
உனக்குள்ளுமிருந்தால்
விரைவாக துது அனுப்பு
உன்னை வந்து சேர்வது
என் கடன்
Saturday, October 29, 2011
Friday, October 28, 2011
Thursday, October 27, 2011
Wednesday, October 26, 2011
சந்தோஷம்
உனக்கா நான் பூங்கொத்தை வாங்கும் போது
வாடி இருந்த பூங்கொத்துகள் எல்லாம்
மலர்ச்சி அடைகின்றன
வாடி இருந்த பூங்கொத்துகள் எல்லாம்
மலர்ச்சி அடைகின்றன
காரணம் காவலன் கை விட்டு
காதலன் கை மாறப் போகிறோம் என்ற
சந்தோஷத்தில்
glitter-graphics.com
Wednesday, October 19, 2011
முடிவுரையை எழுதிவிட்டு போ..........
Saturday, October 15, 2011
Friday, October 14, 2011
நினைவிருக்கிறதா
நானும் நீயும் முதல் முதல்
சந்தித்த மூங்கில் காடு
நினைவிருக்கிறதா ?
நீ எனக்கு தந்த
ஒற்றை ரோஜா
நினைவிருக்கிறதா ?
நீயும் நானும் சேர்ந்து
அனுபவித்த மழைகாலம்
நினைவிருக்கிறதா ?
உன்னக்காக நான் எழுதிய
முதல் கவிதை
நினைவிருக்கிறதா ?
உனக்கா நானும் எனக்கா நீயும்
நம் நண்பர்களுடன் அடிக்கடி சண்டை செய்வோமே
நினைவிருக்கிறதா ?
உனது பெயரும் எனது பெயரும்
சேர்த்து எழுதிய அந்த கடற்கரை
நினைவிருக்கிறதா ?
நானும் நீயும்
சந்தித்து கொள்ளும் போது
மயில் இறகு சேகரிப்போமே
நினைவிருக்கிறதா ?
உன் கனவில் நான் வர வேண்டும்
என் கனவில் நீ வர வேண்டும் என்று வேண்டிக்கொள்வோமே
நினைவிருக்கிறதா ?
உனக்கு நான் தந்த
முதல் முத்தம்
நினைவிருக்கிறதா ?
எனக்கு நீ எழுதிய முதல்
காதல் கடிதம்
நினைவிருக்கிறதா ?
எத்தனை பேர் சுற்றி இருந்ததாலும்
யாருக்கும் தெரியாமல் கண் சிமிட்டுவாய்
அந்த கள்ளத்தனம் நினைவிருக்கிறதா ?
நானும் நீயும்
பேசிக்கொண்டு நீண்டதூரம் செல்வோமே
அந்த ஒற்றையடிபாதை நினைவிருக்கிறதா?
Wednesday, October 12, 2011
உன் மீது நான் கொண்ட காதல்
தண்ணீரில் மிதக்கும் இலை கொண்ட
காதலை தண்ணீர் அறிவதில்லை
செடியின் மீது பூக்கும் பூ கொண்ட
காதலை செடி அறிவதில்லை
நிலவின் மீது நட்சத்திரம் கொண்ட
காதலை நிலா அறிவதில்லை
வான் மீது பறவை கொண்ட
காதலை வான் அறிவதில்லை
பூமி மீது மழை கொண்ட
காதலை பூமி அறிவதில்லை
கால்கள் மீது பாதை கொண்ட
காதலை கால்கள் அறிவதில்லை
உன் மீது நான் கொண்ட
காதலை நீயும் அறியவில்லை
Monday, October 10, 2011
Sunday, October 9, 2011
Subscribe to:
Posts (Atom)