Friday, June 15, 2012

மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன

                                                 
                                             

என் காதலை 
உனக்கு சொல்ல வரும் போது
எல்லாம் வார்த்தைகள் 
மௌனத்தில் ஆயுள்கைதியாகிவிடுகின்றன

பிரிந்து விடுவார்களோ என்று .........



காதலர்கள் 
சந்தோசமாக இருந்தால் 
அதிகம் வருந்துவது 
நான் தான் 
எங்கே அவர்களும் 
நம்மைப்போல் 
பிரிந்து விடுவார்களோ 
என்று .........

Monday, June 11, 2012

கல்லறை சென்றும் காத்திருக்கிறேன் உனக்காக.........



நீ வருவாய் என 
உனக்காக காத்திருந்து 
கல்லறை 
சென்றுவிட்டேன் 
எனக்காக 
இல்லா விட்டாலும் 
என் புனிதமான 
காதலுக்காவேனும் 
என் கல்லறை வந்து 
பூக்களாக 
உன் முத்தங்களை 
தூவிச்செல்..
கல்லறை சென்றும் 
காத்திருக்கிறேன் 
உனக்காக..............  

Friday, May 18, 2012

உன் வரவிற்காய் காத்திருப்பேன்



கவிதை 
எழுதும் போதெல்லாம் 
உன் பிரிவை மறந்து 
நீ என் அருகில் இருப்பதாக உணர்கிறேன் 
உன் வரவிற்காய் காத்திருப்பேன் 
உனக்கான  
என் கவிதைகளோடு 

Monday, May 7, 2012

இன்றும் இருவரும் உயிரோடு ............!!!



நம் காதலை 
நாம் மறக்கவில்லை
அதனால் தான்
இன்றும் இருவரும் உயிரோடு ............!!!

மோட்சம்



நான் எழுதிய கவிதையில்
ஒன்றையாவது 
நீ படித்திருந்தால்
என் கவிதைக்காவது
மோட்சம் கிடைத்திருக்கும் 

உனக்கான என் காதல்


உனக்காக வாங்கபட்ட
ரோஜா 
உனக்கு தரபடாமல் இருப்பது போல 
உனக்கான 
என் காதலும் 
உன்னிடம் சொல்லப்படாமல் 
என்னிடமே இருக்கிறது.

என் தூக்கத்தை இரையாக்கி விட்டன



உன்னை காதலிக்க 
ஆரம்பத்தில் இருந்து 
கனவுகளும் கற்பனைகளும் 
என் தூக்கத்தை தமக்கு 
இரையாக்கி விட்டன 

Thursday, May 3, 2012

உறங்காத இரவுகள்



உன்னை நினைத்துக்கொண்டு 
உறங்காத இரவுகள் எல்லாம் இன்றும் 
 என்னை கேலி செய்கின்றன 
என் தூக்கத்தை 
தம் பறித்து விட்டோம்
 என்று !!!

Tuesday, April 3, 2012

எங்கு கற்றுக்கொண்டாய் ??



பார்வைகளால் ஊடல் கொண்ட- என்னை 
முத்தத்தால் சமதானப்படுத்தலாம் என 
எங்கு கற்றுக்கொண்டாய்?

Monday, March 12, 2012

உன்னை பார்த்த பின்பு


உன்னை பார்பதற்கு முன்பு 
கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்
உன்னை பார்த்த பின்பு  
கவிதைக்கும் எனக்கும் சிறிது 
 தூரம் கூட இல்லை

சொல்லாத காதலில் சுகம் இல்லை



உதிர்ந்த பூவில் அழகில்லை 
எழுதாத கவிதையில் நயம் இல்லை
புரியாத கேள்விக்கு பதில் இல்லை 
பிரிந்த உறவில் பாசம் இல்லை 
சொல்லாத காதலில் சுகம் இல்லை 

Saturday, March 3, 2012

கைபேசி



என் முத்தங்களை 
யாருக்கும் தெரியாமல் 
உன்னிடம் சேர்ப்பது 
கைபேசி 

கண்ணாடி


 
என்னை பார்க்கும் போது
உன்னை என்னக்கு 
காட்டுவது கண்ணாடி

என் பேனா



என்னை தவிர 
உன் பெயரை முத்தமிடும் 
என் மறு இதழ் 
என் பேனா 

உன் பெயர்


மொழியில் உள்ள அழகான 
எழுத்துக்களின் கோர்வை 
உன் பெயர் 

Tuesday, February 7, 2012

என்னவன்எனக்காக வருவான் என்று !!!!!



நிலாக் காய்கிறது
என்னவன் இன்னும்
வரவில்லை
நானும் நிலவும்
தனிமையில்
நான் மட்டும்
என்னவன்
வருகைக்காக தனிமையில்
பேச்சு துணையின்றி
காய்கின்ற நிலவோடு
மெளனமாக பேசிக்கொள்கிறேன்
என்னவன்எனக்காக
வருவான் என்று !!!!!

நம் கண்கள் தேடுகின்றன




என்னவனே
நானும் நீயும்
சுற்றி திரிந்த
அத்தனை இடங்களையும்
இன்று இருவரும்
பிரிந்து விட்ட பிறகும்
யாருக்கும் தெரியாமல்
மெளனமாக
நம் கண்கள் தேடுகின்றன

Tuesday, January 31, 2012

என் பேனா



என் பேனா 
என்னைத்தவிர 
உன் பெயரை 
முத்தமிடும் என் 
மறு இதழ் 

Friday, January 27, 2012

என்னை போல் அதுவும் உன்னை நேசிப்பதால்



என்னிடம் இருக்கும் 
நீ எறிந்த பேனா  கூட 
இன்று உன்னை பற்றி 
கவிதை எழுதுகிறது 
காரணம் 
என்னை போல் 
அதுவும் உன்னை நேசிப்பதால் 

இறுதியில் உன்னைப் பற்றியே எழுதி முடித்து விடுவேன்



உன்னை தவிர 
வேறு எதையாவது பற்றி -கவிதை 
எழுதத் தொடங்குவேன் 
இறுதியில் உன்னைப் பற்றியே 
எழுதி முடித்து விடுவேன் 

உன்னோடு நான் வாழும் நாள்



உன்னோடு 
நான் வாழும் நாளை 
எண்ணுவதில்லை 
அது கனவாகி விடுமோ 
என்ற பயத்தில் ......

Thursday, January 19, 2012

நாட்குறிப்பு


உன்னை பற்றிய
என் ரகசியப்
பொக்கிஷம்
நாட்குறிப்பு

என்னை போல் அதுவும் உன்னை நேசிப்பதால்



நீ எறிந்த பேனா கூட
இன்று உன்னை பற்றி
கவிதை எழுதுகிறது 
காரணம் 
என்னை போல்
அதுவும் உன்னை 
நேசிப்பதால் 

Tuesday, January 17, 2012

என்ன மாயம் செய்தாயோ ?



பிரியும் போது
என்ன மாயம் செய்தாயோ 
நீ மறக்க சொன்ன பின்னும் 
உன்னையே நினைக்கிறது 
என் மனம், 

Monday, January 16, 2012

தனிமையில் தவிக்க விட்டு சென்றது ஏனோ ?



மரங்கொத்தி பறவையாக 
என் மனதில் 
உனக்கான ஓர் 
இடத்தை தந்து விட்டு 
நீ குடியேறாமல் 
என்னை தனிமையில் 
தவிக்க விட்டு சென்றது ஏனோ ?

Monday, January 9, 2012

அவனருகில் நீ இல்லை ............



என்னருகில் நீ இருந்து 
சத்தம் இல்லாமல்
தந்த முத்தங்கள்  இன்று 
நீ என்னை பிரிந்ததால் 
கேலி செய்கின்றன 
முத்தம் பெற 
நீ தவிக்கிறாய் தருவதற்கு 
அவனருகில் நீ இல்லை ............

Monday, January 2, 2012

நீ கோவப்படுவது என் மேல் நீ கொண்ட காதலை விட அழகானது ..........



நீ என்னோடு 
சண்டை போடா
வேண்டும் என்பதற்காகவே
 நீ 
கோவப்படும் படி 
நடந்து கொள்வேன் 
நீ கோவப்படுவது 
என் மேல் நீ கொண்ட காதலை விட 
அழகானது ..........

பாறையை விட கொடுமையானதா உன் இதயம் ?????



நான் உன் மேல் கொண்ட 
காதல் கண்டு பாறை கூட-கனிந்து 
என் மேல் இரக்கம் காட்டுகிறது.
நீ மட்டும்  ஏன் என் மேல் 
இரக்கம் காட்ட மறுக்கிறாய் 
பாறையை விட கொடுமையானதா
உன் இதயம் ?????

Sunday, January 1, 2012

உன் நினைவுகள் என்னை சுற்றி இருப்பதால்



நண்பர்கள் சூழ நான் 
அமர்ந்திருக்கும் போது
அவர்கள் என்னைப் பற்றி
என்ன தவறாக சொன்னாலும் 
''ஆமா '' போடு விடுவேன் 
காரணம் 
உன் நினைவுகள் என்னை சுற்றி
சூழ அலை மோதிக்கொள்வதால் தான்

காதலின் சுகமே காத்திருப்பதுதான்



உன்னை சந்திப்பதற்காக 
வர சொல்லி விட்டு 
நீண்ட நேரத்திற்கு
முன்னதாகவே 
நான் சென்று உனக்கா 
காத்திருப்பேன் 
காதலின் சுகமே 
காத்திருப்பதுதான் 

இங்ஙகனம் புரிந்து கொண்டிருக்க மாட்டோம்



பிரிவு என்ற ஒன்று 
நமக்கிடையில் இல்லை என்றால் 
நாம் இருவரும் ஒருவரை ஒருவர் 
இங்ஙகம் புரிந்து கொண்டிருக்க 
மாட்டோம் 

மீண்டும் ஏன் பாலைவனமாக்கி விட்டு சென்றுவிட்டாய்?


இதுவரை காலமும்
பாலைவனமாக இருந்த -என்
மனதில் சாறல் மழையாக நீ
வந்து நனைத்து
விட்டு மீண்டும் ஏன்
பாலைவனமாக்கி விட்டு
சென்றுவிட்டாய்????????