இன்று நீயும் நானும் சேர்ந்தில்லை
நம் நினைவுகள் கூட எம்மால் பிரிக்க முடியாத
அளவிற்கு ஒன்று சேர்ந்துள்ளன
உன்னை காணும் நாட்கள் எல்லாம்
மொழிகள் மட்டுமல்ல விழிகளும்
மௌனித்து விட்டன
என் காதலை
உனக்கு சொல்லிருந்தால்
இருவரும் ஒருவரை ஒருவர்
பிரிந்திருக்க தேவையில்லை
உன்னை பிரியும் போது என்
கண்கள் கூட மௌனித்து விட்டது
கரணம் என் உயிரான நீ
என்னை பிரியும் போது
உயிர் அற்ற உணர்வற்ற ஜடமாகிவிட்டேன்
உன்னை பிரிந்த அந்த நொடி இருந்து
என்னை மறந்து
உன்னை மட்டுமே நினைத்து
உனக்காகவே காத்திருக்கிறேன்
காதலில் காத்திருப்புக்களும் சுவாரசியமான சுகங்கள்தான்
ReplyDeleteஅருமை
வாழ்த்துகள்.... .