Friday, November 11, 2011

உனக்காகவே காத்திருக்கிறேன்



இன்று நீயும் நானும் சேர்ந்தில்லை
நம் நினைவுகள் கூட எம்மால் பிரிக்க முடியாத 
அளவிற்கு ஒன்று சேர்ந்துள்ளன 

உன்னை காணும் நாட்கள் எல்லாம் 
மொழிகள் மட்டுமல்ல விழிகளும்
 மௌனித்து விட்டன

 என் காதலை
 உனக்கு சொல்லிருந்தால் 
இருவரும் ஒருவரை ஒருவர் 
பிரிந்திருக்க தேவையில்லை 

உன்னை பிரியும் போது என் 
கண்கள் கூட மௌனித்து விட்டது 
கரணம் என் உயிரான நீ 
என்னை பிரியும் போது 
உயிர் அற்ற உணர்வற்ற ஜடமாகிவிட்டேன் 

உன்னை பிரிந்த அந்த நொடி இருந்து 
என்னை மறந்து 
உன்னை மட்டுமே  நினைத்து 
உனக்காகவே காத்திருக்கிறேன் 

1 comment:

  1. காதலில் காத்திருப்புக்களும் சுவாரசியமான சுகங்கள்தான்
    அருமை
    வாழ்த்துகள்.... .

    ReplyDelete