என்னவனே !
பிரிந்து போன நம் காதல்
இன்றும் இருவர் கண்களிலும்
கண்ணீர்துளியாய்
ஏனோ இன்று நம்
காதலின் சுகங்கள்
வலிகளாககி அவை இன்று
வாரங்களாகி விட்டன
நிஜங்கள் எதுவும்
இன்று என்னோடு இல்லாத போது
உன் நினைவுகள் மட்டும்
உயிர் உள்ள நியமாய்
உன்னை கண்டுகொண்ட போது
ஒரு நிமிடமேனும் சிந்திக்கவில்லை
என் இதய வாசலில் உன்னை
குடிபுகுவேன் என்று
மொட்டாகி மலராது போன
மலர்கள் வலிகளை சுமந்து
மறுபடி மலர்வதை போல
பிரிவையும் தாண்டி
உன்னையே நினைக்கிறது
மனது
வெளியே வர முடியாமல்
சிலந்தி வலையில் சிக்கிய
சிறு புழுவாய் உன் பிரிவில்
சிக்கிய இவளின் மரண வலி
அறியாதவன நீ ???????
இனியவனே
எனக்குள்ளிருக்கும் அத்தனையும்
உனக்குள்ளுமிருந்தால்
விரைவாக துது அனுப்பு
உன்னை வந்து சேர்வது
என் கடன்
நன்று
ReplyDelete