தண்ணீரில் மிதக்கும் இலை கொண்ட
காதலை தண்ணீர் அறிவதில்லை
செடியின் மீது பூக்கும் பூ கொண்ட
காதலை செடி அறிவதில்லை
நிலவின் மீது நட்சத்திரம் கொண்ட
காதலை நிலா அறிவதில்லை
வான் மீது பறவை கொண்ட
காதலை வான் அறிவதில்லை
பூமி மீது மழை கொண்ட
காதலை பூமி அறிவதில்லை
கால்கள் மீது பாதை கொண்ட
காதலை கால்கள் அறிவதில்லை
உன் மீது நான் கொண்ட
காதலை நீயும் அறியவில்லை
No comments:
Post a Comment