Friday, October 14, 2011

நினைவிருக்கிறதா





நானும் நீயும் முதல் முதல்
சந்தித்த மூங்கில் காடு
நினைவிருக்கிறதா ?

நீ எனக்கு தந்த
ஒற்றை ரோஜா
நினைவிருக்கிறதா ?

நீயும் நானும் சேர்ந்து
அனுபவித்த மழைகாலம்
நினைவிருக்கிறதா ?

உன்னக்காக நான் எழுதிய
முதல் கவிதை
நினைவிருக்கிறதா ?

உனக்கா நானும் எனக்கா நீயும்
நம் நண்பர்களுடன் அடிக்கடி சண்டை செய்வோமே
நினைவிருக்கிறதா ?

உனது பெயரும் எனது பெயரும்
சேர்த்து எழுதிய அந்த கடற்கரை
நினைவிருக்கிறதா ?

நானும் நீயும்
சந்தித்து கொள்ளும் போது
மயில் இறகு சேகரிப்போமே
நினைவிருக்கிறதா ?

உன் கனவில் நான் வர வேண்டும்
என் கனவில் நீ வர வேண்டும் என்று வேண்டிக்கொள்வோமே
நினைவிருக்கிறதா ?

உனக்கு நான் தந்த
முதல் முத்தம்
நினைவிருக்கிறதா ?

எனக்கு நீ எழுதிய முதல்
காதல் கடிதம்
நினைவிருக்கிறதா ?

எத்தனை பேர் சுற்றி இருந்ததாலும்
யாருக்கும் தெரியாமல் கண் சிமிட்டுவாய்
அந்த கள்ளத்தனம் நினைவிருக்கிறதா ?

நானும் நீயும்
பேசிக்கொண்டு நீண்டதூரம் செல்வோமே
அந்த ஒற்றையடிபாதை நினைவிருக்கிறதா?

No comments:

Post a Comment