Tuesday, November 8, 2011

மழைகாலநினைவுகள்



அன்றொரு நாள் மழைகாலம்
நானும் நீயும் மட்டும்
தனிமையில்

இருவரும் சண்ணடை பிடித்துக்கொண்டு
நீ ஒரு பக்கமும் நான் மறு பக்கமும்
திரும்பி பார்த்தபடி

எத்தனையோ காதலர்கள்
என்னென்னவோ தமக்குள்
பேசிக்கொண்டிருக்க
நானும் நீயும் மட்டும்
கோபத்தோடு பேசிக்கொள்ள

என்னோடு நீ பேசுவாய் என நானும்
உன்னோடு நான் பேசுவேன் என நீயும்
காத்திருந்தே அன்றைய பொழுது கழிந்தது

 இருவரும் ஒருவருக்குள் ஒருவர்
நான் செய்தது தவறா நான் செய்தது தவறா ?என
எண்ணியபடி நாம்

எத்தனையோ
காதலர்கள்
என்னென்னவோ தமக்குள் பேசிக்கொள்ள
தமக்குள் பேசிக்கொண்டிருக்க
 நானும் நீயும் மட்டும்
கோபத்தோடு மௌனம் பேச

உன்னோடு பேச என கைபேசி எடுத்து
நீ அழைப்பாய் என வைத்துவிடுவேன்
நீ அழைத்ததும் புதிதாக பிறந்த உணர்வோடு பேச
மழைத்துளிகள் என்னோடு போட்டி போட்டு
தன் காதலை அது சொல்லியது

நம் இருவர் சண்டையும் முடிவுக்கு வர
நம் சண்டையின் காரணத்தை அன்றோடு மறக்க
இன்று கேட்டலும் நாம்
ஒருதடவை மட்டும் பிரிந்தோம் என்பது
உண்மை ஆனால்
இருவர் மனதிலும் இன்றுவரை
நாம் பிரிந்த அந்த நொடியை
இன்றுவரை எண்ணி பார்ப்பதில்லை.............................

No comments:

Post a Comment