நீ தலையில் சூடும் பூவிற்கு தரும்
பிறவி பலனை ஏன் எனக்கு தரமறுக்கிறாய்
நீ என்னை காதலிப்பதை
உன் கண்கள் சொல்லி விடுகின்றன
ஏன் உதடுகள் சொல்லவருவதை
தடுத்து மௌனிகின்றாய்
உன் இதய வீட்டில்
நான் மட்டுமே குடியேற முடியும் அதனை
உன்னை காணும் போது
உன் கண்கள் எனக்கான இடத்தினை உறுதி செய்கின்றன
என்று நீ மௌனம் கலைக்கின்றாயோ
அன்றே நாம் இருவரும் காதலர்களாக முடியும்
No comments:
Post a Comment