Sunday, November 13, 2011

என்று நீ மௌனம் கலைக்கின்றாயோ அன்றே நாம் இருவரும் காதலர்கள்



நீ தலையில் சூடும் பூவிற்கு தரும்
பிறவி பலனை ஏன் எனக்கு தரமறுக்கிறாய் 
நீ என்னை காதலிப்பதை 
உன் கண்கள் சொல்லி விடுகின்றன 
ஏன் உதடுகள் சொல்லவருவதை
 தடுத்து மௌனிகின்றாய் 

உன் இதய வீட்டில் 
நான் மட்டுமே குடியேற முடியும் அதனை 
உன்னை காணும் போது 
உன் கண்கள் எனக்கான இடத்தினை  உறுதி செய்கின்றன 
என்று நீ மௌனம் கலைக்கின்றாயோ 
அன்றே நாம் இருவரும் காதலர்களாக முடியும் 

No comments:

Post a Comment